தகுதி என்ன ?
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நடந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'உதயநிதிக்கு அமைச்சராகும் தகுதி உண்டு. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர். இளம் வயதில் வேலையை ராஜினாமா செய்து, அரசியலுக்கு வந்துள்ளார் என்றால், ஏதோ எதிர்பார்த்து தான் வந்துள்ளார்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவராவது, ஐ.பி.எஸ்., படிச்சுட்டு அரசியலுக்கு வந்துள்ளார்... உதயநிதியோட தகுதி என்னவென்று இவரால சொல்ல
முடியுமா?' என்றார்.அருகிலிருந்தவர், 'ஏதாவது எதிர்பார்த்து தான், நாங்கள் அரசியலில் இருக்கிறோம் என ஒப்புக்கொண்டதற்காக அமைச்சரை பாராட்டலாம்...' என்றதும்,
சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE