புதுடில்லி: 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நல்லாட்சி தினத்தையொட்டி புதுடில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.
மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாநிலங்கள் பின்வருமாறு:
வணிகம் & தொழில்கள் துறையில் ஆந்திராவும், மனிதவள மேம்பாட்டு துறையில் தெலங்கானாவும், பொது சுகாதாரத்தில் கேரளாவும்,பஞ்சாப்; பொது சுகாதாரம் - கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்;கோவா; பொருளாதார நிர்வாகம்; குஜராத்; சமூக நலன் & மேம்பாடு ஆகிய துறைகளில் முதலிடம் வகிக்கின்றன.
![]()
|
அமித்ஷா பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தது. மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் தான். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE