மதுரை: மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடுஅரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு மாநகராட்சி சார்பில் 4வது நோட்டீஸ் அளித்து, 'கட்டுமானப்பணி தொடர்ந்தால் சீல் வைக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்திற்குள் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள இடத்தில் மாடியுடன் தி.மு.க., அலுவலகம் கட்டப்படுகிறது. நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மாநகராட்சி அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநகராட்சி மூன்று முறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இருப்பினும் கட்டுமானப்பணி நடந்தது. இறுதி எச்சரிக்கையாக நான்காவது 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “நோட்டீஸ்களுக்கு நிர்வாகம் சார்பில் 'எந்த கட்டடமும் கட்டவில்லை. கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும்தொடர்பில்லை' என பதில் அளித்துள்ளது.இனியும் கட்டுமானப் பணி தொடர்ந்தால் 'சீல்' வைக்கப்படவுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE