'நாங்க அப்படியே தான் இருக்கோம்!'
கோவையில், மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அதில், தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், 'கட்சி நிர்வாகிகள் பாகுபாடு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்... ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்... கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்...' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'தி.மு.க., எப்போதும் எதிர்க்கட்சியினரையும் அரவணைச்சு தான் போகுது... கட்சி தாவி வந்தவங்க, தி.மு.க.,வுல
பதவியை பிடிச்சு, அமைச்சரும் ஆகிடுறாங்க... காலம் காலமாக தி.மு.க., தொண்டர்களாக இருக்கும் நாங்க இன்னும், அப்படியே தான் இருக்கோம்...' என நொந்தபடியே கூற, சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement