ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 'சிப்காட்' தொழிற்சாலைகளில் சென்னை ரவுடிகளின் ராஜ்யம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனால், தொழிற்சாலைகள் நிம்மதியாக நடத்த முடியவில்லை என தொழிற்சாலை நிர்வாகிகள் புலம்பி வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் கடந்த 28ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக , ரவுடிகள் அட்டகாசம் குறித்து உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், சென்னை ரவுடிகள் மட்டுமின்றி மதுரை, திருநெல்வேலி ரவுடி கும்பலும் தொழிற்சாலைகளில் ஆதிக்கம் செய்வது தெரிய வந்தது.இதையடுத்து, தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க, 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' காவல் துறை அதிகாரி வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது
இந்த படையினர், ரவுடிகள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். விரைவில் தொழிற்சாலைகளை மிரட்டும் ரவுடிகள் மீது துப்பாக்கி சத்தம் கேட்கப்படும் என போலீசார் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-- நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE