ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகா வடுகப்பட்டி கிராமத்தை ஆர் கே வி எம் பயர் ஒர்க்ஸ் பயர் ஒர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு இன்று(2022 ஜன.,01) காலை 8 45 மணிக்கு வெடிபொருள் அறையில் ஏற்பட்ட தீபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

மாவட்ட வருவாய் அலுவலர், சிவகாசி சப் கலெக்டர், விருதுநகர் எஸ்பி ,ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி., வத்திராயிருப்பு தாசில்தார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., காமினி பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE