பா.ஜ., சட்டசபையில் அமளியை ஏற்படுத்த தயார்!

Updated : ஜன 02, 2022 | Added : ஜன 02, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை: கடந்த சில மாதங்களாக எப்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்தாலும், ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி சபையை முடக்கி வருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. இந்த முறையும் தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் முழுமையாக சபையை முடக்கின.எதிர்க்கட்சியினர் என்ன செய்தனரோ, அதை தமிழகத்திலும் செய்ய, பா.ஜ., முடிவெடுத்து விட்டது.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., தலைவர்

சென்னை: கடந்த சில மாதங்களாக எப்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்தாலும், ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி சபையை முடக்கி வருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. இந்த முறையும் தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் முழுமையாக சபையை முடக்கின.எதிர்க்கட்சியினர் என்ன செய்தனரோ, அதை தமிழகத்திலும் செய்ய, பா.ஜ., முடிவெடுத்து விட்டது.



latest tamil news

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் பேசியுள்ளார். தமிழக சட்டசபை விதிகள் குறித்து நன்கு ஆய்வு செய்யும்படி கூறியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையிலும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இதே முறையை பின்பற்ற வேண்டும் என அண்ணாமலைக்கு, நட்டா ஆலோசனை வழங்கியுள்ளாராம்.


latest tamil news

'பெட்ரோல், டீசல் விலையை குறை, வெள்ள நிவாரணத்தை அதிகப்படுத்து, பொங்கல் பணம் எங்கே' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பதாகைகளை ஏந்தியபடி தமிழக சட்டசபையின் மைய பகுதியில் கூச்சலிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது குறித்து கூறப்பட்டுள்ளது. அண்ணாமலை, அ.தி.மு.க.,வினருடன் ஆலோசனை செய்து, பார்லிமென்ட் முடக்கத்துக்கு பதிலடி தர திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டசபைக்குள்ளும், வெளியிலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

R VENKATARAMANAN - Chennai,இந்தியா
02-ஜன-202220:40:57 IST Report Abuse
R VENKATARAMANAN நீ எதிர்கட்சியாரிந்த போது என்னென்ன ஆட்டம் போட்டாய . நீ கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறை படுத்தாவிடில் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
02-ஜன-202220:32:28 IST Report Abuse
R VENKATARAMANAN திரு அண்ணாமலையும் ஒரு போலீஸ் அதிகாரி கவர்னரும் ஒரு போலீஸ் அதிகாரி இருவருக்கும் என்னன செக்ஷன் எப்படி கேஸ்போடமுடியும் என்று விபரம் அறிந்தவர்கள். எனவே சபை காவலர்களை வைத்து ப ஜ க மெம்பர்களையோ அல்லது அதிமுக மெம்பர்களையோ வெளியேற்றி விடலாம் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். உங்களை எங்கு எப்படி மடக்குவது என்று இருவருக்கும் நன்றாக தெரியும். அவர்கள் முழு தெம்புடன் ஆர்பரித்தால் இவர்கள் ஆட்டம் முடிந்து விடும். .எனவே இவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளவேண்டும்.. இவர்கள் ஆட்டம் செல்லுபடியாகாது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-202217:44:24 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் மொழியில் சொன்னால் தான் இவர்களுக்கு புரியும். பலே.
Rate this:
02-ஜன-202220:45:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்உங்களுக்கு இருப்பது 4 MLA , 129 ஒரு ஆளுக்கு 30 அப்புறம் உன் நிலை யோசிச்சு பாரு ஏற்கனவே JAYA வுக்கு என்ன நடந்தது கவனத்தில் கொள்ளு...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
06-ஜன-202220:21:20 IST Report Abuse
சாண்டில்யன்அது வேறேயாச்சே குடும்ப சண்டை அதெல்லாம் இனிமே நடக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X