'அது தான் அரசியல்வாதிகளின் சாமர்த்தியம்!'
திருநெல்வேலி மேடை போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள கோட்டை, தொன்மையான கொத்தளமாகும். மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ், 3.06 கோடி ரூபாய் மதிப்பில், அதை புனரமைக்கும்பணியை, மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமீபத்தில் துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தொல்லியல் சின்னங்கள் அருகே கல் குவாரி அமைக்க அனுமதி கிடையாது என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அப்படியே பஞ்சமி நிலத்தில், ஆளுங்கட்சி பத்திரிகை அலுவலகம் அமைக்கவும் அனுமதி கிடையாதுன்னு சொன்னால் நல்லா இருக்குமே...' என்றார்.
அருகிலிருந்தவர், 'அந்த கட்சி பத்திரிகையின் நில பிரச்னையை எப்படி மூடி மறைச்சுட்டாங்க பார்த்தீங்களா... அது தான், இந்த அரசியல்வாதிகளின் சாமர்த்தியம்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement