புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,750 பேருக்கு கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றைய (ஜன.,02) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.20 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.42 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஒமைக்ரான்
இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. இதில் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 510 பேரும், டில்லியில் 351 பேரும், கேரளாவில் 156 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜன.,03) காலை 8 மணி நிலவரப்படி 145.68 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 23,30,706 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE