திருவள்ளூர்-தனியார் தொழிற்சாலையில் பெண்கள் இறந்ததாக, 'யுடியூபில்' வதந்தி பரப்பிய, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகில் உள்ள, தனியார் கல்லுாரி விடுதியில் தங்கியுள்ளனர்.இவர்களில் சிலருக்கு, கடந்த மாதம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த, ஒன்பது பேர் இறந்த தாக, வதந்தி பரவியதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாக, திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இதில், யுடியூபில் வதந்திய பரப்பியதாக, திருச்சியைச் சேர்ந்த, சாட்டை துரைமுருகன், 34, கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.இவர் மீது, ஏற்கனவே பல வழக்கு இருந்ததால், அவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்ற கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.திருவள்ளூர் கிளைச் சிறையில் இருந்த,துரைமுருகனை, போலீசார் நேற்று காலை, புழல் சிறையில்அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE