லக்னோ: உ.பி.,யில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மாரத்தானில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பங்கேற்ற இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். ஆனால், நிர்வாகிகள் இதனை கண்டு கொள்ளவில்லை. இதற்கு ராகுல், பிரியங்காவிற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலம் ரேபரேலியில் பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் காங்கிரஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில், ஆயிரகணக்கான பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்றனர். அதில் பெரும்பான்மையானோர் முகக்கவசம் அணியவில்லை. கோவிட் பரவல் அதிகரித்த நிலையில், முகக்கவசம் இல்லாமல் சிறுமிகள் பங்கேற்றதை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மாரத்தான் துவங்கியதும், பங்கேற்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் எழுந்து ஓடிய போதும், காங்கிரஸ் நிர்வாகிகள் வேடிக்கை பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., நிர்வாகிகள், உங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற குழந்தைளின் வாழ்க்கையில் விளையாடுவது சரியா ? பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சிக்கலாக்குவது சரிதானா பிரியங்கா? கோவிட் வல்லுநர் ராகுல் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE