அவர் பேசியதாவது: ரோடு வசதியின்றி மக்கள் சிரமப்படுவதை சரி செய்யாமல் ரூ.112 கோடியில் நுாலகம் கட்ட அரசாணை வெளியிடுகின்றனர். பெரியாறு கூட்டு குடிநீர், வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. கடந்தாண்டு அ.தி.மு.க., அரசு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உதயநிதி போன்றோர் கூறினர்.

தற்போது மூன்றாவது அலை வந்த பிறகும் கூட ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி என கூறி விட்டு 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்தது மக்களுக்கு தி.மு.க., அரசு செய்த துரோகமாகும் என்றார்.
எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேசுகையில், ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் தருவதாக அறிவித்தது. இதுவரை வழங்காததால் எட்டு மாதங்களில் ரூ.8 ஆயிரம் பெண்களிடம் கடன்பட்டுள்ளது. விற்பனை ஆகாத பொருட்களை வாங்கி பொங்கல் பரிசாக வழங்குகின்றனர்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE