புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் நான்கு முன்னாள் முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புபடையை மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை மூலம், மத்திய அரசு, பாதுகாப்பு அளித்து வருகிறது.
![]()
|
இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பி.டி.பி.,கட்சியின் மெகபூபா முப்தி, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புபடையை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு நான்கு முன்னாள் முதல்வர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement