வேலுார்:அடுத்த முதல்வர் நீங்க தான் என சந்திரபாபு நாயுடுவை பார்த்து மக்கள் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பெங்களூரில் இருந்து, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, திம்மாம்பேட்டை வழியாக ஆந்திரா மாநிலம், குப்பத்திற்கு இன்று (ஜன.06) மதியம் காரில் சென்றார்.திம்மாம்பேட்டை நகர தெலுங்கு தேச கட்சியினர், செட்டியப்பனுார் கூட்டு சாலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது, ஆந்திரா மாநிலத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் படித்து வருகின்றனர்.அவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும், தமிழ் தெரிந்த போதுமான அலுவலர்களை நியமிக்க தாங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அவரிடம் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்டு ஏற்பாடுகள் செய்வதாக நாயுடு கூறினார். ஆந்திராவுக்கு அடுத்த முதல்வர் நீங்க தான் என அப்பகுதி மக்கள் கூறியதை கேட்ட சந்திரபாபு நாயுடு அதை ஆமோதிப்பதை போல சிரித்துக் கொண்டே சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE