அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்... 'ஏர்ப்போர்ட்'டில் அலாரம் ஒலிக்கும்!

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை விமான நிலையத்தின் எல்லை, அடையாறு ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது. இதனால், சென்னையில், கனமழை பெய்யும்போது, விமான நிலையம் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. தற்போது, அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை, தொடர்ந்து அறிந்து கொள்ளும் வகையில், நீரின் அளவை தானாக பதிவு செய்யும், தானியங்கி இயந்திரம், இரண்டாவது

சென்னை: சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


சென்னை விமான நிலையத்தின் எல்லை, அடையாறு ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது. இதனால், சென்னையில், கனமழை பெய்யும்போது, விமான நிலையம் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது.




latest tamil news


தற்போது, அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை, தொடர்ந்து அறிந்து கொள்ளும் வகையில், நீரின் அளவை தானாக பதிவு செய்யும், தானியங்கி இயந்திரம், இரண்டாவது விமான ஓடுபாதை பாலம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த இயந்திரம், அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து பதிவு செய்து, சென்னை விமான நிலைய நிர்வாக கட்டடத்தில் அமைந்துள்ள, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.



latest tamil news


பாலத்தின் கீழ் ஓடும் நீரின் அளவு, 9.5 மீட்டர் வரை உயரும் போது, கட்டுப்பாட்டு அறையில், அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கும். மேலும், விமான நிலையத்தின் 10 அதிகாரிகளுக்கு, எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும்.


கனமழை காலங்களில், சென்னை விமான நிலையத்தின் முக்கிய பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

ponssasi - chennai,இந்தியா
11-ஜன-202217:39:54 IST Report Abuse
ponssasi சென்னை விமான நிலையம் நீர் வழி பாதையை ஆக்கிரமித்திருந்தால் அந்த பகுதியை ஆற்றுடன் சேர்க்கவேண்டும். இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அலாரம் ஒலித்தால் என்ன செய்ய முடியும் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றுவிடலாம். கடந்த மாதம் பெய்த பெருமழை போல கூடுதலாக ஒரு 10. சென்டிமீட்டர் பெய்து விட்டால் என்ன செய்வார்கள். நீர்வழி பாதையை அக்கிரமிக்கவேண்டாம், மழை நீர் பூமிக்குள் செல்வதை தடுக்கவேண்டாம். பெய்யும் மழைநீர் பாதி பூமி உள்வாங்கிக்கொள்ளும் மீதம்தான் ஆறாக ஓடி நீர்நிலைகளில் தேங்கும். ஆனால் சென்னையில் நூறு சதவீத நீரும் வீணாக கடலில் கலக்கிறது. நீர் உட்புக இடமும் இல்லை, நீர் தேங்க நீர் நிலைகளும் இல்லை. இங்கு மழை வருவதை முக்கூட்டியே கணிக்க எந்த வசதியும் இல்லை
Rate this:
Cancel
Jaihind - Chennai,இந்தியா
11-ஜன-202214:31:54 IST Report Abuse
Jaihind நல்ல முயற்சி அனால் இந்த கருவியை சில கிலோமீட்டர் அப்பால் பொருத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவகாசம் கிடைக்கும் செய்வார்களா ???
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11-ஜன-202210:26:40 IST Report Abuse
Ramesh Sargam நான் அன்றைக்கே சொன்னேன். "காவேரி எனக்கு. அப்போல்லோ உனக்கு" என்று. அது இப்ப நிஜம் ஆயிடுத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X