அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக; பழனிசாமி விமர்சனம்
அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக; பழனிசாமி விமர்சனம்

அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக; பழனிசாமி விமர்சனம்

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
சேலம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்ததாகவும், அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக சேலம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல்
அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக; பழனிசாமி விமர்சனம்

சேலம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்ததாகவும், அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சேலம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. அளவு குறைவான பொருள்கள், பொங்கல் பை இல்லாத அவலம், தரமற்ற பொருள் வழங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன்மூலம் திமுக 30 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு உள்ளது.



எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

latest tamil news

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வடகிழக்கு பருவமழையை ஸ்டாலின் முறைப்படி ஆய்வு செய்யாத காரணத்தினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா நோய் பரவுவதாக சுகாதாரத்துறை அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (59)

Hari - chennai,இந்தியா
16-ஜன-202213:39:47 IST Report Abuse
Hari நீயா பேசுறது, உன்னால்தான் தமிழகம் தி மு க விடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது..
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
13-ஜன-202200:19:19 IST Report Abuse
சாண்டில்யன் இவரு போட்டுட்டுப்போன சோத்துப்பானை ஒரு பருக்கையில்லாமல் கிடந்தது தெரியாதோ? கடைசீ நாட்களில் நூற்றுக் கணக்கான டெண்டர்களை விட்டு பர்சென்டேஜ் வசூலித்து முடிந்துக்கொண்டு போன கதையும் யாருக்கும் தெரியாதோ? பத்து ஆண்டுகளுக்குமேல் தார் போடாத எங்கள் தெருவில் தேர்தலுக்கு முந்தின நாள் தார் சாலை வேலை நடந்ததே
Rate this:
Hari - chennai,இந்தியா
16-ஜன-202213:48:10 IST Report Abuse
Hariஇப்போது உங்கள் ஊரில் நல்ல பணமலை பொழிகிறதா, நல்லவேளை ஒரு சந்தோசம் உங்கள் தெருவில் தார்ச்சாலை கடைசியில் போட்டதற்கு, இப்போது என்றால் ....உங்களால் கூழாங்கற்களில்தான் நடப்பீர்கள்....
Rate this:
Cancel
12-ஜன-202202:15:32 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் நீங்கள் யாரும் (அதிமுக, திமுக, நடுவண் அரசு பாஜக) உங்கள் கட்சியின் சொந்த காசையோ அல்லது உங்கள் சொந்த காசையோ செலவு செய்து எந்தவிதமான திட்டங்களையோ, இலவசங்களையோ மக்களுக்கு தரவில்லை என்பதனை தயவு செய்து புரிந்து கொண்டு பேசுங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணம் ஒருவேளை நீங்கள் யாராவது உங்கள் சொந்த கட்சி பணத்திலோ அல்லது உங்கள் சொந்த பணத்தில் இருந்து செலவு செய்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X