'உறுதிமொழி எழுதிக் கொடுப்பாரா?'
சிவகங்கையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, 'நீட்' தேர்வு. தமிழகத்திற்கு, நீட் தேர்வு தேவையற்றது. மாநிலங்கள் என்ன தான் எதிர்த்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி இத்தேர்வை ரத்து செய்ய முடியாது. கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைமுறை வர வேண்டும். நல்லவேளை நான் இந்தியாவில் படிக்காமல் அமெரிக்காவில்
படித்தேன்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... 'நீட்' தேர்வு எதுக்காக வைக்கிறாங்கன்னு இவருக்கு புரியாமலா இருக்கு? 'நீட் தேர்வே எழுதாமல் டாக்டராகும் மாணவர்கள்கிட்டே தான் நான், 'ட்ரீட்மென்ட்' எடுப்பேன்'னு, இவரை உறுதிமொழி எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்...' என்றதும்,
சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE