வேலூர் : வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ் கொடுத்து 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவர் 2010ம் ஆண்டு முதல் வேலுார் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
புகாரின் படி இவரது கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், எம்.ஏ., கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை போலி என்பதும், இதை கொண்டு 10 ஆண்டுகள் இவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கடந்தாண்டு செப்., மாதம் 2 ம் தேதி பன்னீர்செல்வத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE