கொழும்பு:இலங்கை வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையின் முன்னாள் கண்காணிப்பாளருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் வெலிக்கடை சிறையில் கைதிகளிடம் போதைபொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 2012 நவ.,9ல் சிறையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவா, வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்க ஜீவா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை கண்காணிப்பாளராக இருந்த எமில் ரஞ்சனுக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE