கோலாகலமாக தைத்திருநாள் துவங்கி விட்டது. இந்நாளில் புதுப்பானையில் பொங்கல் வைப்பதுதான் வழக்கம். பழைய பானையை அடுத்த போகியன்று உடைக்கின்றனர். சிலர் பயன்படுத்தாமல் அப்படியே விடுகின்றனர்.பழைய பொங்கல் பானைகளை பயனுள்ள வகையில், எப்படி உபயோகிக்கலாம் என பார்ப்போம்...!அழகழகாய் அலங்காரம்பானைகளில் விதம், விதமான வண்ணங்களில் அழகிய ஓவியங்ளை தீட்டினால் அது, கலைப்பொருள் ஆகிவிடுகிறது. உங்கள் கற்பனை மற்றும் கைவினை திறன் மூலம் பீட்ஸ், மணிகள், லேஸ் மற்றும் மிர்ரர் ஒர்க் செய்து இன்னும் ஸ்பெஷலாக மெருகேற்றலாம். கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் இதை சிறந்த அலங்காரப் பொருளாக, அலுவலகம், வீடுகளில் வைக்கலாம். அலங்கரிக்கப்பட்ட இந்த பானையை, கேண்டில் ஹோல்டர் என பலவிதங்களில் பயன்படுத்தலாம்.செடிகளுக்கு பாதுகாப்புபழையதோ இல்லை உடைந்த பானையோ, பூக்களுடன் தோட்டத்தில் இருப்பது, தனி அழகுதான். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பழைய மண் பானைகளை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். பானைகள் பெரும்பாலான செடிகளுக்கு, ஆரோக்கியமான சூழலை தருகிறது. இவைதண்ணீர், ஈரப்பதத்தை தக்க வைத்து,காற்றையும் ஊடுருவ அனுமதிக்கிறது. வெப்பநிலை மாற்றத்திலிருந்து, மண் பானைகள் செடிகளை பாதுகாக்கும்.பறவைகளுக்கு வீடுவீடுகளில் பறவைகளுக்கு கூடு அமைப்பதற்கு, மண் பானைகளை பயன்படுத்தலாம். பானையின் வாய்ப்பகுதியை அடைத்து, பக்கவாட்டில் செல்லும்படி துளையிட்டு வையுங்கள். பாதுகாப்பாக இருப்பதை உணரும் குருவி, புல், குச்சி போன்ற பொருட்களை கொண்டு வந்து கூடு அமைக்கும். மொட்டை மாடி, தோட்டம் என மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைக்க வேண்டும். கயிற்றில் கட்டி தொங்கிய நிலையில், கூடு இருப்பதை பறவைகள் அதிகம் விரும்பும்.பறவைகளுக்கு தண்ணீர்வெப்பம் நம்மை போலவே சின்னச்சிறிய பறவைகளையும் தாக்குகிறது. கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விரும்புபவர்கள், பழைய மண் பானைகளை பயன்படுத்தலாம். சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களில் நீர் சீக்கிரமே சூடாகிவிடும். மண் பானையில், நீர் வெகு நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். பானையின் வாய்ப்பகுதிக்கு கீழாக வெட்டி எடுத்து விட்டால், அடிப்பகுதி நன்கு அகலமாக இருக்கும். இதில், தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது, உடல் சூட்டை தணித்துக்கொள்ளவும், பறவைகள் முங்கி எழுவதற்கும் வசதியாக இருக்கும்.ஆரோக்கியமான சமையல்அவசர உலகில், மண்பானையில் சமைப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இருப்பினும், வார இறுதி நாட்களில், இரவு நேரங்களில், நேரம் கிடைக்கும் போது என அவ்வப்போது மண் பானையில் சமைக்கலாம். மண்பானையில் சமைக்கும் உணவின் சுவைக்கு நிகர் எதுவும் இல்லை. பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகள், மண் பானைகளில் சமைப்பதன் மூலம் உணவில் ஏராளமாகக் கிடைக்கின்றன. மண்பானை உணவு சூட்டை தணிக்கும், சீக்கிரம் கெடாது என ஏராள நன்மைகள் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE