வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு :அன்னிய செலவாணி பற்றாக்குறையால் உணவுப்பொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உணவுப்பொருள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவிடம் 7300 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால் சமீபத்தில் கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்தியா சார்பில் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, அஜித் நிவார்ட்டை சந்தித்தார். இந்திய வழங்கும் கடன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும் என அஜித் நிவார்ட் தெரிவித்துள்ளார்.
'இந்தியாவின் கடன் உதவியால் இலங்கையிடம் டிச., இறுதியில் இருந்த உணவுப்பொருள் இறக்குமதிக்கான கையிருப்பு இரு மடங்காக உயரும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE