பரமக்குடி :பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் தொடங்கி கீழப் பள்ளிவாசல் தெருவில் ஆக்கிரமிப்பால் மக்கள் பதற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்நிலையில், தினமும் கிராமங்களில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.பஸ் ஸ்டாண்டிலிருந்து கீழ பள்ளிவாசல் தெரு செல்லும் வழியில் கடந்த சில மாதங்களாக கடைகள் வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் தங்கள் இடத்தையும் தாண்டி மக்கள் நடந்து செல்லும் பாதையில் பொருட்களை அடுக்கி வைத்து விடுகின்றனர்.டூவீலர், ஆட்டோக்கள்செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.ஆகவே தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE