வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் 38.91 சதவீதம் உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 38.91 சதவீதம் அதிகரித்து, 2.80 லட்சம் கோடியாக உள்ளது.பொறியியல், ஜவுளி, ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்திருப்பதை அடுத்து, டிசம்பரில் இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
இம்மாதத்தில் இறக்குமதி 38.55 சதவீதம் அதிகரித்து, 4.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.60 லட்சம் கோடி ரூபாயாக, டிசம்பரில் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 49.66 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் 68.91 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE