இளையான்குடி :இளையான்குடி தேவூரணியைச் சுற்றியுள்ள ரோட்டில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ரோடு சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேவூரணியை சுற்றி ரோடு போடப்பட்டுள்ளது.குறுகலான இந்த ரோட்டில் டூவீலர், சிறிய வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய நிலையில், அப்பகுதியில் வீடுகள் கட்டுவோர் சில நாட்களுக்கு முன்பு லாரியில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக சென்றனர். படித்துறை அருகே எதிர்பாராதவிதமாக குறுகலான ரோட்டில் லாரி கவிழ்ந்ததால் படித்துறை பகுதியை ஒட்டிய ரோடு சேதமடைந்தது. இந்த வழியாக டூவீலர்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE