கொடைக்கானல், :கொடைக்கானல் மலைப் பகுதி அரசு அலுவலக நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.தற்போதைய தி.மு.க., அரசு 8 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றது. அப்போது அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்காது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதி அரசு அலுவலகங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகள் புலம்பித் தவிக்கின்றனர்.நிர்வாக ரீதியாக தலையீடு செய்யும் கட்சியினர் மிரட்டுவது, டெண்டர் விவகாரங்களில் குறிப்பிட்டோர் ஆதிக்கம் செலுத்தும் போக்கு, போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து, புகார்தாரர்களை மிரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அரங்கேறுகிறது. நிர்வாகிகளின் இத்தகைய போக்கு பொதுமக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு புகார்கள் பறந்துள்ளதாக தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE