'மாஜி' அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங் ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர்.உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங் ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர்.



latest tamil news

உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த சுவாமி பிரசாத் மவுரியா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் பா.ஜ.,வில் இருந்தும் சமீபத்தில் விலகினார்.இவரை தொடர்ந்து பா.ஜ.,வை சேர்ந்த தரம் சிங் சைனியும் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினார்.


latest tamil news


சுவாமி பிரசாத் மவுரியாவின் விலகலைத் தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இருந்து வெளியேறினர்.இந்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரோஷன்லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வர்மா, வினய் ஷாக்கியா, பகவதி சாகர் ஆகியோர் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தனர். அப்னா தள எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங்கும் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

Sivanandham - Thanjai,இந்தியா
15-ஜன-202213:02:53 IST Report Abuse
Sivanandham அடுத்த மடம் எதுவென்று முடிவாகிவிட்டதா....
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202214:18:45 IST Report Abuse
முக்கண் மைந்தன் ......
Rate this:
Cancel
Sivanandham - Thanjai,இந்தியா
15-ஜன-202213:02:04 IST Report Abuse
Sivanandham இதைத்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று சொல்வார்களோ...
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-ஜன-202213:01:35 IST Report Abuse
ஜெயந்தன் அப்போ..இனிமேல் தேர்தல் முடியும் வரை..." பாகிஸ்தான்..தீவிரவாதிகள் சதி...நாட்டுக்கு ஆபத்து..."..என்றெல்லாம் கூச்சல் கிளம்பும்...வழக்கம் போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X