உத்தமபாளையம் -சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று ஜன.,25 க்குப் பின் உத்தமபாளையத்தில் சேவல் சண்டை நடத்தப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்,தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தமபாளையம் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார். நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சேவல் சண்டைக்கு முன்பதிவு நடந்தது. கரூரைசேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில் சேவல்சண்டை ஜனவரி 25 வரை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பா.ஜ. இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மோடிதார்த்திக், நகர் பா.ஜ. தலைவர் தெய்வம், விவசாய அணி தங்கமுத்து கூறியதாவது:உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவையடுத்து ஜன., 17ல் நடக்க இருந்த சேவல் சண்டை நிறுத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜனவரி 25 க்கு பின் உத்தமபாளையத்தில் நடத்தப்படும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE