வடலுார் : வடிகால் வாய்க்காலை சேதப்படுத்தியதை தட்டிக் கேட்ட வி.ஏ.ஓ., உள்ளிட்ட இருவரை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். தையல்குணாம்பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18ம் தேதி வருவாய்த் துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்தியநாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை நேற்று வெட்டி சேதப்படுத்தினர்.
இதனை தட்டிக் கேட்ட வி.ஏ.ஓ., தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர். தனவேல் அளித்த புகாரில் குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப் பதிந்து சித்தாலிக்குப்பம் சந்தானராஜ், 32; விஜயகுமார், 31; ஆடூர் குப்பம் அறிவழகன், 30; சிவராஜ்,26; திருநாவுக்கரசு, 28; ஆகியோரை செய்து, வைத்தியநாதன், ஜோதியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE