புதுச்சேரி : தேசிய வலுதுாக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற புதுச்சேரி மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி நடந்தது.இப்போட்டியில், புதுச்சேரி வலுதூக்கும் சங்க செயலாளர் பிரவீன் தலைமையில், பயிற்சியாளர் பாக்கியராஜிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், 53 கிலோ எடை ஜூனியர் பிரிவில் மாணவர் இளம்பருதி, ஒரு வெண் கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
69 கிலோ எடை சப் ஜூனியர் பிரிவில் மாணவி கிருத்திகா 3 தங்கம், ஒருவெள்ளி பதக்கம் வென்றார்.மாணவி அனுசியா சப் ஜூனியர் 76 கிலோ எடைப் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை, சட்டசபை வளாகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE