கோவை: மத்திய கல்வி அமைச்சகத்தின் 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்திற்கு தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரிகளில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதன்படி, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, மன்றாம்பாளையம் தொடக்கப்பள்ளி, குருநெல்லிபாளையம் தொடக்கப்பள்ளி, கொண்டம் பட்டி நடுநிலைப்பள்ளிகளுக்கு, எல்சி.டி.,புரொஜக்டர், இணை வசதியுடன் கணினி, வகுப்பறைகள் சீரமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நவீன வகுப்பறைகளை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் ராஜாராம் திறந்து வைத்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் பாலாஜி, கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மகேஸ்வரன், கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறை தலைவர்கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE