சேலம்: வீராணத்தை சேர்ந்த மாணிக்கரத்தினம் மகன் கவுதம், 25. இவர், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மொபைல் கடையில் விற்பனையாளராக உள்ளார். அவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அங்கம்மாள் காலனியில் நடந்து வந்தபோது, இருவர் கத்தியை காட்டி மிரட்டி, 1,600 ரூபாயை பறித்துக்கொண்டனர். இதுகுறித்து அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, திருப்பத்தூர், ராஜமங்கலத்தை சேர்ந்த பழனி, 46, அவரது மனைவி வனிதா, 36, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், வலசையூர், சுக்கம்பட்டி புதுகாலனியை சேர்ந்த, சேட்டு மகன் ரஞ்சித், 22. இவர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மொபைல் கடையில் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம், பணி தொடர்பாக, ஆலமரத்துக்காடு அருகே நடந்து வந்தபோது, மர்ம நபர் கத்தியை காட்டி, 1,100 ரூபாயை பறித்துக்கொண்டார். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, நெத்திமேடு, கரிய பெருமாள் கோவில் கரட்டை சேர்ந்த ராஜி, 46, என்பவரை கைது செய்தனர்.