பள்ளிபாளையம்: பள்ளிபாளைத்தில் வரும், 25ல், ஜல்லிக்கட்டு நடக்கிறது. இது குறித்து, விழா ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நாகராஜன் கூறியதாவது; பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை, குமாரபாளையம் பா.ஜ., இணைந்து நடத்தும் தமிழர் பண்பாடு, கலாசார மீட்டெடுப்பு விழா மற்றும் ஜல்லிக்கட்டு வரும், 25 பள்ளிபாளையம் அருகே ஐந்துபனை பகுதியில் நடக்கிறது. பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நேற்று கால்கோள் விழா நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் சதீஸ், மாதேஸ்வரன், நீதி வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE