பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணி பரிசல் மூலம் நடந்து வருகிறது. பள்ளிபாளையம் பாலத்திலிருந்து, 40 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு ஆற்றில் குதித்துள்ளார். அப்போது பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து விட்டு, போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தந்தனர். குதித்தவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. உள்ளூர் பரிசல்காரர்கள் மூலம் தேடப்பட்டது. ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்றும் ஐந்து பரிசல்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement