மேட்டுப்பாளையம்: குரும்பனூரில் பாதி இடிந்த நிலையில் உள்ள, தரைமட்ட பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு, புதிதாக பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பனூர் கிராமம் உள்ளது. இங்கு சிக்கதாசம்பாளையம் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளின் எல்லையில் உள்ள பள்ளத்தில், தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தரைமட்ட பாலம் பாதி உடைந்து, தண்ணீரில் அடித்துச் சென்றது. இரு வாகனங்கள் செல்லும் அளவில் இருந்த பாலம், ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் பாதியாக குறைந்தது.
மருதுார், தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள, ஏராளமான கிராம விவசாயிகள், விடியற்காலை காய்கறிகளை, தரைமட்ட இப்பாலத்தின் வழியாக, மேட்டுப்பாளையம் உழவர் சந்தைக்கும், மார்க்கெட்டுக்கும் கொண்டு வருகின்றனர்.'இரவில் வரும் விவசாயிகளுக்கு தரைமட்ட பாலம் பகுதியில், தெருவிளக்கு வசதி ஏதும் இல்லாததால், பாலத்தில் உள்ள குழியில் விழுந்து, பலர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம் ஆகிய இரு ஊராட்சிகளின் எல்லையில் உள்ள இப்பள்ளத்தில், விரைவில் பாலம் கட்ட வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement