வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.அமரீந்தர் சிங் வெளியேறி, பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பரிதாப நிலையில் உள்ளது.
![]()
|
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் இப்போது நல்ல நிலையில் உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் அதிக வெற்றி பெற்றுள்ளது. பல தேர்தல் கணிப்புகள் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கூறினாலும் பெரும்பான்மை கிடைக்காது என்கின்றன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பது இப்போது பெரிய பிரச்னையாகி விட்டது.
![]()
|
இந்த கட்சியின் பஞ்சாப் தலைவர் பகவந்த் சிங் மான் தற்போது எம்.பி.,யாக உள்ளார். இவர் தான் முதல்வர் வேட்பாளர் என சொல்லப்படுகிறது.ஆனால் கட்சி தலைவர் கெஜ்ரிவால் 'மக்களே முதல்வரைத் தேர்ந்தெடுக்கலாம்' என சொல்லி, ஒரு தொலைபேசி எண்ணை தெரிவித்துள்ளார். யார் முதல்வராக வேண்டும் என்பதை இந்த எண்ணுக்கு அழைத்து மக்கள் தெரிவிக்கலாமாம்.இதனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement