ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமில், மதம் பிடித்த யானை தாக்கியதில் பாகன் பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தி, வரகளியாறில் வனத்துறையினர் சார்பில் யானைகள் முகாம் நடத்தப்படுகிறது. இங்கு, 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜன.,16) காலை கோழிகமுத்தி முகாமில், 12 வயதான அசோக் யானைக்கு மதம் பிடித்தது. யானையை பராமரித்து வரும் கோழிகமுத்தி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த பாகன் ஆறுமுகம் 45, யானையை கட்டுப்படுத்த முயன்றார்.
கோபமடைந்த யானை, அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை, வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். யானையை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE