சூலுார்:திருவள்ளுவர் சிலைக்கு மாணவ, மாணவியர் மாலை சூடி, வணங்கினர்.சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருவள்ளுவருக்கு சிலை உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.நுகர்வோர் உரிமை சங்கம், இளைஞர் மன்றம், மாதர் சங்கத்தின் சார்பில், 46வது சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இணைய வழியில் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.பாட்டு, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. திருவள்ளுவர் ஜெயந்தியை யொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்று வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வள்ளுவரின் அறநெறி கருத்துகள் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை என, புகாழாரம் சூட்டப்பட்டது. நுகர்வோர் உரிமை சங்க தலைவர் தேவராஜன், செயலர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE