திண்டுக்கல் -திண்டுக்கல் அருகே சட்டக்கல்லுாரி மாணவர் தங்கபாண்டி 21 மற்றும் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த் கருப்பன் மகன் தங்கபாண்டி. மதுரை சட்டக் கல்லுாரியில் முதலாண்டு படித்து வந்தார். நேற்றுவிடுமுறை நாளில் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.வாழைக்காய்பட்டி அருகே தடுப்பணையில் உறவினருடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தங்கபாண்டி நீரில் மூழ்கினார். உறவினர்கள் காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.
தங்க பாண்டி நீரில் மூழ்கி பலியானார்.மற்றொரு சோகம்திண்டுக்கல் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் ஹரீஷ் 15, பத்தாம் வகுப்பு படித்தார். வில்லியம் மகன் ரிச்சர்ட் 14. ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர். தண்ணீருக்குள் தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி பலியாயினர். ஒரே நாளில் நிகழ்ந்த இச்சம்பவங்கள் திண்டுக்கல் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement