திண்டுக்கல்,-திண்டுக்கல் அருகே, சட்டக் கல்லுாரி மாணவர் உட்பட மூவர் குளத்தில் மூழ்கி இறந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி, 21. மதுரை சட்டக் கல்லுாரியில் முதலாண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாளில், திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.வாழைக்காய்பட்டி அருகே தடுப்பணையில் உறவினருடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக, தங்கபாண்டி நீரில் மூழ்கினார். உறவினர்கள் காப்பாற்ற முயற்சித்தும், முடியவில்லை. தங்கபாண்டி நீரில் மூழ்கி பலியானார்.மற்றொரு சோகம்திண்டுக்கல், ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் ஹரீஷ், 15; பத்தாம் வகுப்பு படித்தார். வில்லியம் மகன் ரிச்சர்ட், 14; ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் நேற்று அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றனர். தண்ணீருக்குள் தவறி விழுந்த இருவரும், நீரில் மூழ்கி பலியாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE