வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-வெளிநாடுகளுக்கு செல்வதை விட, கோவா மாநிலத்துக்கு செல்வதை இந்தியா சுற்றுலா பயணியர் விரும்புவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஓ.ஒய்.ஓ., என்ற சுற்றுலா நிறுவனம், ஆண்டு தோறும் சுற்றுலா மேற்கொள்ள மக்கள் அதிகமாக விரும்பும் இடம் பற்றி ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2022ம் ஆண்டில் சுற்றுலா செல்லும் விரும்பும் இடம் தொடர்பாக சமீபத்தில் இந்தியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் ஆய்வு நடத்தியது.
இதில், 61 சதவீத இந்திய சுற்றுலா பயணியர் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு செல்வதை விட, இந்தியாவுக்குள்ளேயே சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் 25 சதவீதம் பேர் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் கோவா மாநிலத்துக்கு செல்வதையே பெரும்பாலான சுற்றுலா பயணியர் விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE