உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகே வசிக்கும், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி, தாயம்மாள். இளநீர் விற்பனை செய்கிறார். 'இல்லம் தேடி கல்வி' திட்ட பயிற்றுனராக உள்ள தாயம்மாள், தனது சேமிப்பு பணத்தில், ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இவரது இச்செயலை கலெக்டர் வினீத் உட்பட பலர், பாராட்டி வருகின்றனர். தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமகிருஷ்ணன், உடுமலை எஸ்.கே.பி., பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி தாயம்மாளை பாராட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் இன்பக்கனி, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.