புதுடில்லி-பிரபல நிறுவனங்களிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, 'கெயில்' என்ற அரசு பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
சி.பி.ஐ., விரித்த வலையில் இவர் வசமாக சிக்கினார்.'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்' என்ற கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பதப்படுத்தி, வினியோகம் செய்கிறது. இயற்கை எரிவாயு, திரவ நிலை ஹைட்ரோகார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறையில் ஈடுபட்டுள்ள கெயில் நிறுவனம், பெட்ரோ கெமிக்கல் பொருட்களையும் விற்பனை செய்கிறது.
தலைநகர் டில்லியில் கெயில் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் பிரிவு தொடர்ச்சி 7ம் பக்கம்லஞ்சம் வாங்கிய... 3ம் பக்கத் தொடர்ச்சிஅமைந்துள்ளது. பிளாஸ்டிக், டயர், ரப்பர் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு விலையில் சில தள்ளுபடி வழங்கப்படுகிறது.தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். இந்நிலையில் தகுதியில்லாத நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று தள்ளுபடி வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.கெயில் பெட்ரோகெமிக்கல் பிரிவின் இயக்குனராக பணியாற்றும் இ.எஸ். ரங்கநாதன், லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்தனர். இதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விரித்த வலையில் ரங்கநாதன் வசமாக சிக்கினார். 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் லஞ்சம் வாங்கியதாக ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.அவருடன், இரண்டு இடைத் தரகர்கள், இரண்டு தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவருக்கு உதவிய அலுவலக ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.ரங்கநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1.29 கோடி ரொக்கம் உட்பட 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளதாவது:டில்லியில் 'ரிஷப் பாலிகெம் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நடத்தும் ராஜேஷ் குமார், தள்ளுபடி சலுகையைப் பெறுவதற்கு பவன் கவுர் என்ற இடைத் தரகரை அணுகினார்.அவர்கள் இருவரும் கெயில் இயக்குனர் ரங்கநாதனை சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு ரங்கநாதன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற சலுகைகளை வாங்கித் தருவதாக வேறு சில நிறுவனங்களிடம் ராஜேஷ் குமார் பேசியுள்ளார். அதன்பின் ராஜேஷ்குமார் மற்றும் பவன் கவுர் இருவரும் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.தள்ளுபடி சலுகை வழங்க 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பேரம் பேசப்பட்டு, அதில் ஒரு தொகை கைமாறியது. இந்தத் தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களை கண்காணித்தனர்.அப்போது சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை ராஜேஷ் குமார் மற்றும் பவன் கவுர் வாங்கியுள்ளனர்.
ரங்கநாதன் கூறியபடி அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ராமகிருஷ்ண நாயர் என்பவரிடம் பணத்தை ஒப்படைக்க முயன்றனர். அப்போது சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.இந்த வழக்கில் ரங்கநாதன், அவருக்கு உதவிய ராமகிருஷ்ண நாயர், இடைத் தரகர்களாக செயல்ப்பட்ட பவன் கவுர், ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE