சென்னை : கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
ஜன. 19 மற்றும் 20ம் தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.நேற்று காலை நிலவரப்படி பிளவக்கல் 5; தென்காசி 4; பள்ளிப்பட்டு செங்கோட்டை 3; ஆரணி திருச்செந்துார் 2; ஸ்ரீவில்லிபுத்துார் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE