திருப்பதி : திருமலையில் மார்கழி மாதம் நிறைவு பெற்ற பின் ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம். அப்போது ஆண்டாள் நாச்சியார் சூடி களைந்த மாலை திருமலை ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது. அதன்படி நேற்று திருமலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.அதற்காக திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோவிலில்ஆண்டாள் நாச்சியாரின் மூலவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட மலை களையப்பட்டு திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று அதிகாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.திருமலை பெரிய ஜீயர், மாலை இருந்த மூங்கில் கூடையை பெற்று ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு சென்று சமர்பித்தார். பின் அந்த மாலை ஏழுமலையான் மூலவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE