தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு பதில்
தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு பதில்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு பதில்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: யாரையும் கட்டாயப்படுத்தி கோவிட் தடுப்பூசி போட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ' மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து
தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: யாரையும் கட்டாயப்படுத்தி கோவிட் தடுப்பூசி போட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ' மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு இந்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ நிர்பந்தம் செய்யவில்லை. கோவிட் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



மேலும் பொது மக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. அச்சு, மின்னணு ஊடகம், சமூக வலைதளம் என அனைத்திலும் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. அதை செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், யாருடைய விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்த முடியாது. அதேபோல், தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்து செல்லும்படி எவ்வித உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (22)

yezhai thamizhan - Rio,பிரேசில்
21-ஜன-202218:54:30 IST Report Abuse
yezhai thamizhan பொய். ரெண்டு வாரம் மட்டும் லாக் டவுன் போடுறோம்னு ஆரம்பிச்சவங்க, ரெண்டு வருஷம் ஆகியும் இன்னும் முடக்கி வெக்குறாங்க.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
17-ஜன-202218:35:34 IST Report Abuse
தமிழ்வேள் காற்றில் பரவும் நோய் கிருமிகள் , ஏசி பயன்பாடுள்ள இடங்களில் எளிதில் பரவும் ....ஆனால் ஏசி பயன்பாடு குறைக்கப்படுவதில்லை ....அதை ஒரு ஸ்டேட்டஸ் ஆக எடுத்துக்கொண்டு பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் ஏசி இல்லாமல் இயங்குவதில்லை .இதனாலேயே கொரோனா அதிகம் தொற்றுகிறது .... சூரிய வெளிச்சம் உட்புகும் வகையிலான அலுவலகங்கள் கூட ஜன்னல் கதவுகளை அடைத்து seyarkaiyaaka ஒரு சூழல் உருவாக்கி நோய்த்தொற்றை அதிகரிக்கிறார்கள் ..இதனை கட்டுப்படுத்த , ஏசி பயன்பாட்டை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தால் கொரோனா தோற்று பணியிடங்களில் குறைய வாய்ப்பு உள்ளது .....அரசு செய்யுமா ?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
17-ஜன-202218:04:03 IST Report Abuse
தமிழ்வேள் தடுப்பூசி போடவில்லை என்றால் பஸ் ரயில் விமான பயணங்களுக்கு அனுமதி மறுப்பு ...அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் பொது இடங்கள் போன்றவற்றில் நுழைய தடை , என்று இறுக்கி பிடித்தால் , எல்லா பயலும் ஊசி போட்டுக்கொள்ள போகிறான் ... மூக்கணாங்கயிறு அரசின் கையில் ..இழுத்து பிடிக்க தெரியாதா ? [ போலீசை கண்ட்ரோல் செய்ய அனுமத்தித்தால் , லஞ்சம் தலைவிரித்து தாண்டவமாடும் ..கொரோனாவும் கூடும் ..தடுக்க இயலாது ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X