திருக்கழுக்குன்றம்-திருக்கழுக்குன்றத்தில் உரம் வழங்க செல்லும் விவசாயிகளிடம், புல் மருந்து உட்பட பிற பொருட்களை வாங்க, விற்பனையாளர் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகாவில், நெல் சாகுபடி முக்கியமானது. கரும்பு, வேர்க்கடலை, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. ஏரி, கிணற்று நீர் இருப்பை பொறுத்து, ஒன்று - மூன்று போகம் விளைவிக்கப்படுகிறது.நெல் சாகுபடிக்கு அத்தியாவசியமான உரத்தை, திருக்கழுக்குன்றம் தனியார் கடைகளில் வாங்க செல்லும் விவசாயிகளிடம் உரம் வழங்குவதோடு, புல் மருந்து உட்பட பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:நெல் சாகுபடிக்கு தேவையான உரத்தை, திருக்கழுக்குன்றத்தில் உள்ள உரக்கடைகளில் வாங்குகிறோம். கடைக்காரர்கள் உரம் வழங்க, புல் மருந்து உட்பட கூடுதலாக வேறு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர் ஏக்கருக்கு சில ஆயிரம் ரூபாய் வீண் செலவாகிறது. அதிகாரிகள் தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE