வாலாஜாபாத்-வாலாஜாபாத் - காஞ்சிபுரம் நான்கு வழிச் சாலை ஓரத்தில், இருபுறமும் மழை நீர் கால்வாய் கட்டும் பணியை, நெடுஞ்சாலை துறையினர் துவக்கி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய இரு வழி சாலை உள்ளது. வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்கு வழியாக விரிவுபடுத்தும் பணியை, நெடுஞ்சாலைத் துறை துவக்கி உள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணி, 2015ல் துவங்கி, 2018ல் முடிந்தது.இரண்டாம் கட்டமாக, 2018ல், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஓரமாக இருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இரண்டாவது கட்டமாக, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை ஓரம் இருக்கும் மரங்களை அகற்றும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கி உள்ளனர். தொடர்ந்து, சாலை ஓரம் இருபுறமும், மழை நீர் வடி கால்வாய் கட்டும் பணியையும், அவர்கள் துவக்கி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE