தேனி : தேனி அருகே பூதிப்புரத்தில் ஊர்காலப்பர்சுவாமி கோயில் பட்டத்து காளை உடல்நலக்குறைவால் நேற்று இறந்தது. கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.இந்த கோயிலில் 23 வயது நிரம்பிய பட்டத்து காளை இருந்தது.
வரதராஜபெருமாள் கோயில் எதிரே வி.ஏ.ஓ., அலுவலகத்தையொட்டிய காலி இடத்தில் காளை பராமரிக்கப்பட்டு வந்தது. மாட்டுப்பொங்கல் நாளில் காளை அலங்கரித்து பரிவட்டம் கட்டி ஊர்வலம் அழைத்து வரும் போது மக்கள் வணங்குவர். சில நாட்களாக காளைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் மாட்டுப்பொங்கல்தினத்தில் பட்டத்து காளை ஊர்வலம் நடக்கவில்லை. நேற்று பட்டத்து காளை இறந்தது. மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். காளையின் உடல் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் அருகே அடக்கம் செய்யப்பட்டது. விரைவில் அடுத்த பட்டத்து காளை தேர்வு நடைபெற உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE