பெங்களூரு-கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கால், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.கர்நாடகாவில் தொற்றை கட்டுப்படுத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டிருந்தும், மக்களின் அவசர சேவைகளுக்கு தடை விதிக்கவில்லை.ஆட்டோ, பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு, அரசு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.வார இறுதி ஊரடங்கில் காலை 8:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை 20 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.வார இறுதி ஊரடங்கு அறிவிக்கும் முன், மெட்ரோ ரயில்களில் தினமும் 4 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். வார இறுதி ஊரடங்கு நாளில் மிகவும் குறைவான பயணியர் பயணித்தனர்.இதனால், மெட்ரோவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE