வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 2.71 லட்சமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு, நேற்று 2.58 லட்சமாக குறைந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,76,18,271 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,57,421 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,53,94,882 ஆனது. தற்போது 17,36,628 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 310 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,86,761 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 158.04 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 79,91,230 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 8,891 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE